பகலில் பயங்கர வெயில் - மாலையில் சூறாவளியுடன் மழை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் வறுத்தெடுத்த நிலையில் மாலையில் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் இடியுடன் கூடிய கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கு மழையும், காற்றும் வீசுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்து வருகிறது.
ஆரம்பத்தில் வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்தது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வெயில் இல்லை. ஆனால் தற்போது சென்னையில்தான் அதிக பட்ச வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்றும் பகல் முழுவதும் பயங்கர வெயில் அடித்தது. கூடவே அனல் காற்றும் வீசியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் மாலையில் நிலைமை தலைகீழாக மாறியது. சென்னை நகரின் உட்பகுதிகளான தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது. அதேசமயம், புறநகர்ப் பகுதிகளிலும் ஓரளவு மழை காணப்பட்டது.
ஆனால் மக்களை பயமுறுத்தும் வகையில் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக் காற்று வீசியது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளிக் காற்று வீசியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் அரை மணி நேரம் வீசிய இந்த சூறாவளிக் காற்றால் நகரமே ஸ்தம்பித்தது. பலத்த வேகத்துடன் வீசிய காற்றால் புழுதி வாரி இறைக்கப்பட்டதால் சாலைகளில் சென்றவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். பல இடங்களில் மரங்கள் பிடுங்கி எறியப்பட்டன. ஓட்டு மற்றும் குடிசை வீடுகளின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications