மேலும் ரூ.11,680 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி
டெல்லி: விவசாயிகளுக்கு மேலும் ரூ.11,680 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் 2008-09க்கான பட்ஜெட் தாக்கலின்போது ரூ.60,000 கோடிக்கு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. விவசாயிகள் நஷ்டமடைந்து தற்கொலை செய்வதைத் தடுக்கவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மன்மோகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேலும் ரூ.11,680 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தக் கடன்தள்ளுபடி ரூ.71,680 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதிகம் பேர் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications