பலிகள்: விஷச் சாராய முக்கிய சப்ளையர் மர்மச் சாவு
பெங்களூர்: தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 200க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கிய விஷச்சாராயத்தை சப்ளை செய்தவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி சௌந்தரராஜன். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பலரது உயிரைக் குடித்த விஷச்சாராயத்தை விற்றவர். இந்த வழக்கு தொடர்பாக சௌந்தரராஜன், அவரது மனைவி சத்யா, மருமகள் ரேகா ஆகியோரை போலீசார் நேற்று (மே 22) கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விஷச்சாராயத்தை அவர்களுக்கு சப்ளை செய்தது யார் என்ற விவரம் அம்பலமானது. பெங்களூர் ஊரக மாவட்டம் கட்டிகெனஹள்ளியை சேர்ந்த முஸ்து என்ற முஸ்டாக் என்பவர்தான் இந்த கொலைகார விஷச்சாராயத்தை சப்ளை செய்த ஏஜெண்ட்.
கடந்த மே 17ம் தேதியன்று சௌந்தரராஜனுக்கு 500 பாக்கெட் கள்ளச்சாராயத்தை முஸ்டாக் சப்ளை செய்துள்ளார். அவற்றை டி.ஜே.ஹள்ளி பகுதியி்ல் தொழிலாளர்களுக்கு சௌந்தரராஜன் விற்றுள்ளார். மே 18ம் தேதியன்று மட்டும் 450 பாக்கெட்டுகளை சௌந்தரராஜன், அவரது மனைவி, மருமகள் ஆகியோர் விற்றுள்ளனர்.
இந்த பாக்கெட்டுகளில்தான் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர். பலருக்கு பார்வை பறிபோனது.
இந்த நிலையில் சௌந்தரராஜன் அளித்த தகவலின்பேரில் கட்டிகெனஹள்ளியில் உள்ள முஸ்டாக் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார் முஸ்டாக்.
அவர் விற்ற விஷச்சாராயத்தை குடித்து ஏராளமானவர்கள் பலியானதை கேள்விப்பட்டு பயந்துபோய் விஷம் அருந்தி முஸ்டாக் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெங்களூர் போலீஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் தெரிவித்தார்.
-
கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications