மேலப்பாளையத்தில் முஸ்லீம்கள் கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மூஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று வியாபாரிகள் சங்கம், சுன்னத் ஜமா அத், ஐக்கிய ஜமாஅத் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மேலப்பாளையம் பஜார் திடல், நேதாஜி ரோடு, அமீன்புரம், ஆசாத் தெரு, சந்தை முக்கு, அண்ணா வீதி, அம்பை ரோடு, ஜின்னா திடல், வி.எஸ்டி முக்கு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோ, வேன், கார் ஆகியவையும் ஓடவில்லை. மெயின் ரோட்டில் பஸ்கள் சென்றன. ஆனால் ஊருக்குள் செல்லவில்லை. இதனால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications