கிரெடிட் கார்ட் மோசடி-ரூ. 45 கோடி 'ஸ்வாகா'

சென்னையில் சமீப காலமாக பல்வேறு வகையான மோசடிச் செயல்கள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. தங்கக் காசுத் திட்டம் என்ற பெயரில் ரூ. 45 கோடி வரை ஸ்வாகா செய்த 7 பேர் சிக்கினர். இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி மோசடி செய்த 7 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
இந்தக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இக்கும்பல் ரூ. 65 லட்சம் வரை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இக்கும்பலிடமிருந்து ஒரு கார், 15 கம்ப்யூட்டர்கள், 35 பவுன் தங்க நகைகள், 47 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா செல்வா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கும்பலைப் போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். தனது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யாரோ சிலர் ரூ. 3.5 லட்சம் வரை பணம் எடுத்திருப்பதாக இவர் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ராமாவரத்தைச் சேர்ந்த சேவியர் மேத்யூ என்பவர் சிக்கினார். இவர் ஒரு தொழிலதிபர். போலியான ஆவணங்களைக் கொடுத்து பல்வேறு பிரபல வங்கிகளிலிருந்து 70 கிரெடிட் கார்டுகளை இவர் வாங்கி வைத்திருந்தார்.
இவற்றைப் பயன்படுத்தி ரூ. 65 லட்சம் அளவுக்கு மோசடியாக பணம் எடுத்துள்ளார். இவரைக் கைது செய்த போலீஸார், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜாமுகமது (22), கார்த்திக் (25), ராஜேஷ்கண்ணா (22), சசிக்குமார், ரவி (32), ஜெய்கணேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications