கர்நாடக தேர்தலில் பெருமளவில் கருப்புப் பணம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெருமளவில் கருப்புப் பணம் களம் இறக்கப்பட்டது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து கோபாலசாமி கூறுகையில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் பெரிய அளவில் இல்லை. சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால் கருப்புப் பணத்தின் புழக்கம் மிக அதிகமாக இருந்தது.
இதை தேர்தல் ஆணையத்தால் மட்டும் தடுக்க முடியாது. கணக்கில் காட்டப்படாத பணம், கருப்புப் பணம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவரை இதுபோன்ற பணப் புழக்கத்தை தடுக்க முடியாது என்றார் கோபாலசாமி.
கருப்புப்பணம் மட்டுமல்லாது, கள்ளச்சாராயமும் தேர்தல் களத்தில் பெருமளவில் புழங்கியது. இதைக் குடித்துத்தான் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications