சிபிஎஸ்இ-சென்னை மண்டலம் 98.56% தேர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் இத்தேர்வை 96 ஆயிரத்து 262 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 91 ஆயிரத்து 690 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் 95.25 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இது 93 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இரண்டே கால் சதவீதம் அதிகரித்துள்ளது.

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.58 சதவீதமாக இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதம் ஆகும்.

சென்னை மண்டலத்தில் தமிழகத்தில் மட்டும் 14 ஆயிரத்து 773 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 98.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகளின் விகிதம் 98.93 சதவீதம், மாணவர்கள் 98.26 ஆகும். புதுச்சேரியில் 99.69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்திலேயே புதுச்ேசரிதான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

சென்னை மண்டலத்திற்குட்பட்ட அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தேர்ச்சி விகிதம் 51.39 சதவீதமாக உள்ளது.

சென்னை டி.ஏவி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிரவன் 500க்கு 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் முறையே 90, 99 என எடுத்துள்ளார். மற்ற பாடங்களான சமஸ்கிருதம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களப் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+