நள்ளிரவில் அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனை சுவர் திடீரென இடிந்துவிழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையில் அந்த சுவர் மேலும் வலுவிழந்தது.
இந்நிலையில் அந்த சுவர் நேற்று நள்ளிரவில் 40 அடி நீளத்துக்கு திடீரென சரிந்து விழந்தது. அப்போது அந்த சுவர் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பாரதிமோகன் (35), பழனிசாமி(30), நீலமேகம்(24), துரை(40) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications