அதிகாரியின் 'செக்ஸ் டார்ச்சர்': பெண் தற்கொலை
நெல்லை: தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் மேலதிகாரி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் மனம் உடைந்த புதிதாக திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஆசிரியர் "ஏ" காலனியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பேட்டரி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த மணிமேகலை (21) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் மணிமேகலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தன் மேலதிகாரி ஒருவர், மணிமேகலையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர்.
அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வீட்டுக்குப் போன பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு தேவையில்லாமல் பேசுவது என தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து வேலையிலிருந்து நின்றார் மணிமேகலை. ஆனாலும் அந்த வக்கிர புத்தி அதிகாரியின் செக்ஸ் டார்ச்சர் தீரவில்லை. தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மணிமேகலை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மணிமேகலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 7 முறை செல்போனில் பேசியதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications