நடுக் கடலில் தீப்பிடித்தது கப்பல் - கேரள என்ஜீனியர் பலி
சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த சரக்குக் கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த மெரைன் என்ஜீனியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொழும்பிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு அஸ்வினி என்கிற சரக்குக் கப்பல் கடந்த 23ம் தேதி சென்னைக்குப் புறப்பட்டது. இந்தக் கப்பலில் மும்பையைச் சேர்ந்த இறக்குமதி நிறுவனத்தின் ஊழியர்கள் 28 பேர் இருந்தனர்.
கப்பல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுக் கடலில் கப்பல் வந்தபோது, பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் ஐந்து பேர் கப்பலின் மேல் தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தூங்கினர்.
இந்த நிலையில் அதிகாலையில் கட்டுப்பாட்டு அறையில் திடீரென மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து என்ஜீனியர்களும் அலறி அடித்து அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பாபு தாமஸ் (41) என்பவர் மட்டும் தீயில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து பிற ஊழியர்கள் பாபுவை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். கப்பலில் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் தீயில் உடலின் பல பாகங்கள் கருகியதால் பரிதாபமாக உயிரிழந்தார் பாபு.
பின்னர் சென்னைக்கு வந்தபின்னர் கப்பல் கேப்டன் சோட்டாயி துறைமுகம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார், பாபு தாமஸின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். பாபுவின் அண்ணன் ஜார்ஜ் தாமஸ் கொச்சியிலிருந்து வந்து பாபுவின் உடலைப் பெற்றுக் கொண்டார்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications