For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவில் திருவிழாவில் போலீசாருக்கு அடி-உதை!

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: கோவி திருவிழாவில் போலீசாருக்கு அடி உதை விழுந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கருங்கலா பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் மாரியம்மன் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் குவிந்தாதல் கூட்டம் அலை மோதியது.

திருவிழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை போன்றோர் திடீரென தகராறு செய்தனர்.

இது குறித்து பொது மக்கள் ஊர் மக்கள் போலீசாரிடம் புகார் செய்தனர்.

கலை நிகழ்ச்சியில் கலாட்டா செய்த செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோரிடம் இது குறித்து குளித்தலை போலீஸ் ஏட்டு ஜெகநாதன் விசாரித்தார்.

அப்பாது செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோர் ஏட்டு ஜெகநாதன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் போலீஸ் படையுடன் வந்து செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோரை கைது செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X