உடைந்த வரவேற்புப் பலகை-கவனிக்குமா கலெக்டரேட்?

கரூரில் இருந்து கோவைக்கு செல்லும் போது ஈரோடு மாவட்டத்தில் வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளை தொட்டு விட்டு தான் செல்ல முடியும்.
கரூர் - கோவை செல்லும் தேசிய நெடுச் சாலையில் ஈரோடு மாவட்ட எல்லை அருகே வைரமடை என்ற கிராமம் உள்ளது.
இந்த பகுதியின் அருகில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்றும், மேலும் சில வாசகங்களும் அந்த பலகையில் எழுதப்பட்டு கம்பீரமாக காட்சி தந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பலகை கடும் காற்று காரணமாக கீழே விழுந்தது. ரோட்டு ஓரத்தில் அனாதையாக பல நாட்களாக கிடக்கும் அந்த விளம்பர பலகையை சமூக விரோதிகள் அபகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
'விழுந்து விழுந்து' வரவேற்கும், வரவேற்புப் பலகையை தூக்கி நிறுத்தி, சரி செய்து முறையாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications