சத்தியமூர்த்தி பவனில் இல.கணேசன் கொடும்பாவி எரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக கூறி, பாஜக தலைவர் இல.கணேசனின் கொடும்பாவி, காங்கிரஸார் சிலர் சத்தியமூர்த்தி பவனில் தீவைத்துக் கொளுத்தினர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து இல.கணேசன் கருத்து ெதரிவிக்கையில், ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வந்தபோதே, பாஜகவின் வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் இல.கணேசன் கொடும்பாவியை இளைஞர் காங்கிரஸார் தீவைத்து கொளுத்தினர்.

மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தண்டபாணி தலைமையில் சுமார் 50 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இல.கணேசன் உருவபொம்மையை எரித்ததுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இல.கணேசன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று தண்டபாணி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+