மாணவிகளை மிரட்டிய நர்சிங் கல்லூரி தாளாளர் கைது
வேலூர்: கூடுதல் கட்டணம் தராத மாணவிகளை தேர்வெழுத விட மாட்டேன் என மிரட்டிய நர்சிங் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் செயிண்ட் ஜார்ஜ் நர்சிங் பயிற்சிக் கல்லூரி உள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாயதாஸ் என்ற ஏஜென்ட் கமிஷன் வாங்கிக் கொண்டு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவிகளை 2004ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
இந்த மாணவிகளிடம் ஏஜென்ட் சொன்னதை விட அதிகமாக அவ்வப்போது கட்டணம் வசூலித்துள்ளனர். ஒரு கட்டத்தி்ல் இதற்கு மேலும் கட்டணம் செலுத்த முடியாது என மாணவிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து பணம் செலுத்தாதவர்களை தேர்வு எழுத விடமாட்டோம் என்று கல்லூரி நிர்வாகம் எச்சரித்தது. அவர்களை விடுதியிலிருந்தும் வெளியேற்றியது. இது குறித்து அந்த மாணவிகள் வேலூர் போலீசில் புகார் தரவே விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார்.
இந்த மாணவிகள் தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப்பிடம் முறையிட்டனர். வேலூர் வந்த எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி மீண்டும் மாணவிகளை கல்லூரியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்.
இந் நிலையில் நேற்று காலை இந்த மாணவிகளை கல்லூரி தாளாளர் விஜய்குமார் அழைப்பதாக சொல்லி கல்லூரி முதல்வர் அனுப்பி வைத்தார்.
தாளாளரை மாணவிகள் சந்தித்தபோது 3ம் ஆண்டு தேர்வு எழுத வேண்டுமானால் இதுவரை கட்டிய பணத்துக்கு மேல் மேலும் ரூ. 1 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கல்லூரி நிர்வாகம் மீது கொடுத்துள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் வாங்கி கொள்கிறோம் என எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதை மாணவிகள் ஏற்க மறுத்தபோது, அப்படியானால் இந்த ஆண்டு நீங்கள் தேர்வெழுத முடியாது. வேறு எந்த கல்லூரியிலும் சேரவும் முடியாதவாறு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து வேலூர் டி.எஸ்.பி. சரவணனுக்கு மாணவிகள் தகவல் தந்தனர். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கல்லூரி அலுவலகத்துக்கு வந்து தாளாளர் விஜயகுமாரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications