கன்னியாகுமரி நில அதிர்வு பகுதிகளில் குழு ஆய்வு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில் புவியியல் துறை பேராசிரியர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் பகுதிகளில் கடந்த 19ம் தேதி இரவு நில அதிர்வு ஏற்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தில் இந்த நில நடுக்கம் 2.5 ரிக்டர் புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.
இந் நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக புவியியல் துறை பேராசிரியர் ஜெயங்கொண்ட பெருமாள், தூத்துக்குடி வஉசி கல்லூரி மரைன் டெக்னலாஜி துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் நில அதிர்வு ஏற்பட்ட கன்னியாகுமரி, சின்ன முட்டம் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்,
கடந்த 19ம் தேதி கன்னியாகுமரி மற்றும் சின்ன மூட்டம் பகுதிகளில் பகுதிகளில் ஏற்பட்டது லேசான அதிர்வுதான். இங்கு நில அதிர்வு ஏற்பட்ட தினத்தில் இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதன் பாதிப்பே கன்னியாகுமரி மற்றும் சின்னமுட்டம் பகுதிகளில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதிகளில் புவிமாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இங்குள்ள பாறைகள் மிகவும் கடினமானவை.
எனவே இங்கு நில அதிர்வு ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. சின்னமூட்டம் மற்றும் கன்னியாகுமரி பகுதி வீடுகளில் ஏற்பட்ட விரிசல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.
இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் ஓப்படைக்கபடும் என்றார்.












Click it and Unblock the Notifications