போடி: குடிகார கணவனை வெட்டி கொன்ற மனைவி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவரது மனைவி சந்திரா (35). இவர்களுக்கு கதிரேசன் (16), மதியழகன் (17) என்ற 2 மகன்கள் உண்டு.
குடிபழக்கம் உள்ள தர்மராஜ் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் போதையில் சந்திராவிடம் தகராறு செய்தார், அடித்து துன்புறுத்தினார்.
இதனால் ஆவேசமடைந்து சந்திரா, தர்மராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தர்மராஜ் அதே இடத்திலேயே இறந்தார்.
இச் சம்பவம் குறித்து போடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி சந்திராவை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications