ஊட்டி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Ooty map
ஊட்டி: ஊட்டி மலைப் பாதையில் அரசு பஸ் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி-முதுமலை சாலையில், கல்லட்டி என்ற இடத்தில் இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

36வது கொண்டை ஊசி வளைவில் இந்தப் பேருந்தை இன்னொரு வாகனம் முந்திச் செல்ல முயன்றது. அப்போது பேருந்தின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.

படு வேகத்தில் அந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 500 அடி பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற விழுந்த பஸ் உருண்டது. இதில் டிரைவர் கார்த்திகேயன், கண்டக்டர் ஹாலன் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பலியானவர்களில் இரு பெண்களும், ஒரு குழந்தையும் அடக்கம்.

இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்ப் பலி மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அந்த பஸ் ஊட்டியிலிருந்து மாயார் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+