ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தம்பதி தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில், கணவனும், மனைவியும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் சுரேஷ். இவரது மனைவி பேபி. இவருக்கு நெஞ்சில் இருந்த கட்டியால் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதனால் சுரேஷ் பெரும் மிகவும் மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் காலை வெகுநேரமாகியும் சுரேஷின் வீடு பூட்டியே கிடந்தது. அவரது நண்பர் முருகன் என்பவர் வீட்டை தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக கிடந்தனர்.
சுரேசின் மடிமீது உட்கார்ந்த நிலையில் பேபி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் அவரது சகோதரி குமாரி என்பவருக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில் கட்டியால் மனைவி அவதிப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை. ஒன்றாக வாழ்ந்த நாங்கள் ஒன்றாக உயிரை விடுகிறோம். இறப்புகுப் பின்பும் எங்களை பிரித்து விடாதீர்கள். இருவரையும் ஒன்றாக எரித்துவிடுங்கள் என எழுதியிருந்தது.
இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.