பொள்ளாச்சி-மிரட்டும் அரை நிர்வாண கொள்ளையர்கள்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் அரை நிர்வாணத்தில் வரும் கொள்ளை கும்பல் ஒன்று தினமும் மக்களை பீதி அடைய வைத்து வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியில் உள்ள சேரன் நகர், வடுகம்பாளையம், லட்சுமி நகர், திருவிக நகர், போன்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நள்ளிரவில் வரும் இந்த கொள்ளையர்கள் உடல் முழுக்க எண்ணெய் பூசியும், உடலில் ஒரே ஒரு ஜட்டி மட்டும் அணிந்தும் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தில்லை நகரில் கோபால குரு என்பவரது வீட்டில் நள்ளிரவில் ஜட்டி கொள்ளையர்கள் புகுந்தனர். சத்தம் கேட்டு கோபால குரு மனைவி விழித்து பார்த்த போது, வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளதை உறுதி செய்து கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கோபால குருவின் மனைவி பேபி, மகன் சிவநேசனை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
திருவிக நகரில் ஆறுக்குக்கும் மேற்பட்ட வீடுகளில் இது வரை ஜட்டி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications