புதுச்சேரியில் பந்த் வெற்றி

அங்கு பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
புதுவையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் தான் அதிகம். ஆனால் அவை இன்று இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் ஒரு சில மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. புதுவை அரசு பஸ்களும் கூட ஓடவில்லை.
அதே போல டெம்போக்களும் இயங்கவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களும் இயங்கவில்லை.
நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகளான நேரு வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, குபேர் பஜார் ஆகிய சாலைகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தன.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
33 பெண்கள் உள்பட 400 தொண்டர்கள் சாலை மறியல் செய்து கைதாகினர்.
வில்லியனூர் அருகே தமிழக அரசுப் பேருந்து மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications