For Quick Alerts
For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் ஓட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ ஒரு கோடி செலவில் புதிய மருத்துவ மனைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கட்டுமான பொருட்கள் பல வைத்திருந்தனர். அதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தகவல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தெரிய வரவே அவர்களும், அவரது உறவினர்களும் அலறி அடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் மருத்துவ மனையில் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
Comments
Story first published: Saturday, June 7, 2008, 10:51 [IST]