மதுரை-ரயிலில் சிக்கி கால்களை இழந்த முதியவர்!
மதுரை: மதுரையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவரின் கால் துண்டானது.
சென்னை மாம்பலத்தில் வசிப்பவர் செல்வராஜ் (64). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு மனைவியுடன் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் வந்தார்.
தாங்கள் கொண்டு வந்த பையை ரயிலில் வைத்து விட்டு மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர். ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.
அப்போது பை ஞாபம் வரவே செல்வராஜ் மீண்டும் ரயில் பெட்டிக்கு ஓடினார். பையை எடுத்துக் கொண்டு அவர் கீழே இறங்கியபோது ரயில் புறப்பட்டுவிட்டது.
அப்போது ரயிலில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது கால்கள் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி நசுங்கின. பாதங்கள் துண்டாயின.
மயங்கி விழுந்த செல்வராஜை பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் வெளியே இழுத்தனர். இதனால் ரயில் சக்கரத்தில் மாட்டாமல் தப்பினார்.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications