ஜூலையில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகரில் ஜூலை 15ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் சேவா தள விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராகுல் காந்தி வருகை தர உள்ளார்.
இது குறித்து கோவையில் காங்கிரஸ் சேவா தள மாநில தலைவர் செல்வராஜ் கூறுகையில், மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்க சேவா தளம் முடிவு செய்துள்ளது. இதற்காக சைக்கிள் பேரணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
இந்த சைக்கிள் பேரணி பிரச்சார பயணம் ஜூலை 15 ல் விருதுநகரில் தொடங்குகிறது. இந்தப் பேரணியை காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராகுல் காந்தி துவக்கி வைக்கிறார்.
விருதுநகரில் தொடங்கும் பேரணி மதுரை, கோவை, திருச்சி, மற்றும் பல மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் 9 ம் தேதி அன்று சென்னையில் நிறைவு பெறுகிறது.
இந்த விழாவில் மத்திய , மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications