இயக்கமற்றுப் போய் விட்டது மத்திய அரசு: அத்வானி

ஹரித்வார் வந்த அத்வானி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் காரணமாக அரசியல் ஸ்திரமின்மையும், நிலையற்ற போக்கும் காணப்படுகிறது. அரசு செயலிழந்து கிடக்கிறது.
எனவே இந்த ஆண்டே நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வருமா அல்லது 2009ல் வருமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டில் வளர்ச்சி விகிதம் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 30 கோடி ஏழை மக்கள் ஈட்டும் சம்பாத்தியத்தை 30 பில்லியனர்கள் ஈட்டி விடுகிறார்கள். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications