பெரியாறு-தமிழக என்ஜினியர்களுக்கு கேரளா புது கட்டுப்பாடு
தேக்கடி: பெரியாறு அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகள் தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட்ட பின்னரே செல்ல வேண்டும் என கேரள அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.
குமுளி-தேக்கடி எல்லையில் உள்ள பெரியாறு அணை நீரை தமிழகம் 999 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் கேரள அரசுக்கு தமிழக அரசு நிதி செலுத்தி வருகிறது.
மேலும் அணை பராமரிப்பை தமிழக அரசே மேற்கொண்டுள்ளது. இந் நிலையில், இந்த அணையின் உயரத்தை அதிகரித்தால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகளும் பாசனம் பெறும் என தமிழக அரசு கூறி வருவதை கேரளம் ஏற்க மறுக்கிறது.
அணையின் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி வருகிறது கேரளா. இதனால் இரு மாநிலகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.
அணைப் பகுதி கட்டுப்பாடு முழுவதும் தமிழக அரசிடமே உள்ள நிலையில் அங்கு தமிழக பொதுப் பணித்துறை சார்பில் செயற் பொறியாளர் தலைமையில் பொறியாளர்கள் டீம் பணியாற்றி வருகிறது.
இந் நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் தேக்கடியில் உள்ள கேரள வன அலுவலகத்தில் கையெழுத்து போட்டு, அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும் என கேரள வனத்துறை திடீரென புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால் தமிழக அதிகாரிகள் கையெழுத்து போட்ட பின்னரே செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications