கண்ணாமூச்சி காட்டும் குற்றால சீசன்!
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் இன்னும் துவங்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியும், போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் குற்றால சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை இதமான தென்றல் காற்று வீசியது. பகலில் நல்ல வெயிலும் காணப்பட்டது.
மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் சீசன் சரியாக இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைநதுள்ளனர்.
இருப்பினும் செண்பகாதேவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைந்த அளவு விழுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வந்த அனைவரும் ஐந்தருவி நோக்கி படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் ஓரே ஓரு பிரிவில் மட்டுமே தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications