சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து குளுமையைக் கொண்டு வந்தது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பின்னர் சென்னை நகரில் வெயிலின் தாக்கம் குறைந்தது. அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெயில் படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கடும் வெயில் அடித்து வந்தது. 100 டிகிரி வரை வெயில் இருந்ததால் மறுபடியும் வெயில் வெளுக்க ஆரம்பித்துவிட்டதோ என்று மக்கள் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில்,நேற்று மாலைக்கு மேல் வானிலை மாறியது. காற்று வீசத் தொடங்கியது. ஆனால் மழை எதுவும் வரவில்லை. இந்த நிலையில், நள்ளிரவில் நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்துக் கட்டியது. திடீரென பெய்த இந்த மழையால் நகரமே ஏ.சி. போட்டது போல குளுமையானது.












Click it and Unblock the Notifications