ஜாதி போஸ்டர் மீது போஸ்டர்-வாலிபர் கொலை

Subscribe to Oneindia Tamil

சேரன்மகாதேவி: ஒரு ஜாதியின் போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது.

முக்கூடல் அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்த வினோத் அப்பகுதியில் உள்ள மில்லில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்தார்.

கடந்த 1ம் தேதி வினோத்தின் பெரியப்பா மகள் சரஸ்வதிக்கும், வீரவநல்லூரை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி முந்தின நாள் (31ம் தேதி) இரவு வினோத் மற்றும் நண்பர்கள் திருமண வாழ்த்து சுவரொட்டிகளை ஊர் முழுவதும் ஒட்டினர்.

மைலப்பபுரத்தில் ஒரு சமுதாயத்தின் சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரம் மீதும் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த இளவரசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றிரவு வினோத் மற்றும் 2 பேர் சைக்கிளில் சென்றபோது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்து கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தது.

அவர்களிடம் இருந்து தப்பி மூவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த கும்பல் வினோத்தை மட்டும் குறிவைத்து துரத்தி சென்று சராமரியாக வெட்டியது. இதி்ல் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+