குளிர்ந்தது குற்றாலம்-தொடங்கியது சாரல் மழை

தென்மேற்கு பருவமழை கடந்த வாரமே கேரள மாநிலத்தில் தொடங்கிவிட்டது. இம்மழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஓட்டியுள்ள சில பகுதிகளில் பெய்தது. இருப்பினும் குற்றாலத்தில் சீசன் சரிவர தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், மாலை நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான புளியரை, மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், குற்றாலம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேக கூட்டம் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இம்மழையினால் வெப்பத்தில் இருந்த பகுதிகள் முழுமையாக குளிர்ச்சியடைந்தன. மழையினால் குற்றால சீசன் ஒரிரு நாளில் களை கட்ட தொடங்கும். மழையின் காரணமாக தமிழக-கேரள எல்லை பகுதிகள் குளு..குளுவென்று இருந்தது. இரவு குளிர்ந்த காற்று வீசியது.
இதே நிலை நீடித்தால் குற்றால சீசன் முழுமையாக களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications