சம்பள பாக்கியை கண்டித்து டாக்டர்கள், ஊழியர்கள் ஸ்டிரைக்!
திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர்கள், ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து அவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில காரணங்களை கூறி அங்கு பணிபுரியும் டாக்டர், மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும், டாக்டர்கள், ஊழியர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு ஏதும் எட்டவில்லை.
இதனால் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர், ஊழியர்கள் என சுமார் 105 பேர் டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனை வெறிச்சோடி கிடந்தது. நோயாளிகள் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications