வைகோ போராட்டத்தில் 'புலி' கேசட் விற்றவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு கேசட் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு வைகோ தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கஆதரவு கேசட், படங்கள் உள்ளிட்டவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications