சூடானின் விமானம் வெடித்துச் சிதறி 100க்கும் மேற்பட்டோர் பலி

ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து சூடான் தலைநகர் கர்தூமுக்கு அந்த விமானம் 200 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் வந்தது. அப்போது கர்தூம் நகரில் வானிலை சரியில்லை. பலத்த காற்றும், இடியுமாக இருந்தது.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விமானி, கர்தூம் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கினார். அப்போது விமானம் சறுக்கி தாறுமாறாக ஓடியது. அப்போது திடீரென விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் விமானநிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
விமானம் முழுவதும் விபத்தில் எரிந்து சாம்பலாகி விட்டது. வானிலை சரியில்லாத நிலையிலும், விமானம் தரையிறங்க அனுமதித்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், ரன்வேயில் விமானம் சரியான முறையில் வந்து கொண்டிருந்தபோது என்ஜின் ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications