கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை-பவாரிடம் தமிழகம் கோரிக்கை
சென்னை: ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க தமிழகத்துக்கு கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டு்ம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் தமிழக உணவுத் துை அமைச்சர் வேலு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் வேலு டெல்லியில் சரத் பவாரை, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் சென்று சந்தித்தார்.
அப்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையை தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் , கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இருவரும் பவாரிடம் வலியுறுத்தினர். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையையும் அவரிடம் எடுத்துரைத்தனர்.
இது குறித்து பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சரத் பவார் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பனீந்த்ர ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications