பள்ளிகளில் கட்டு கட்டாக சிக்கிய கட்டண பணம்!
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் தனியார் பள்ளிகளில் நடத்திய அதிரடிசோதனையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் கட்டுக் கட்டாக சிக்கியது.
நெல்லை, பாளை பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் செந்தட்டி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் நெல்லை, பாளை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 4 பள்ளிகளில் வசூல் வேட்டை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பணம் கத்தை, கத்தையாக இருந்தது தெரிய வந்தது. இவை அனைத்தும் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் என்று தெரிகிறது. அவற்றை கல்வி அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications