பண வீக்கம் 8.75% ஆனது- 7 ஆண்டுகளில் இல்லாத அளவு
டெல்லி: கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பண வீக்க விகிதம் (inflation) 8.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கட்டுக்கடங்காத விலைவாசியை இந்த பணவீக்கம் எதிரொலித்துள்ளது.
மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த அளவை பண வீக்கம் தொட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இது. 8.24 சதவீதமாகவே இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பண வீக்கம் 5.09 சதவீதமாகத் தான் இருந்தது என்பது குறி்ப்பிடத்தக்கது.
மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக முட்டை விலை 4 சதவீதமும், பருப்பு விலை 2 சதவீதமும், காய்கறிகள், பழங்கள், கறி, பால், கோதுமையின் விலை 1 சதவீதமும் உயர்ந்துள்ளன.
அதே போல ரப்பர், பருத்தி, நிலக் கடலை, தேங்காய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பேப்பர், காலணிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.
இந் நிலையில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பிலும் இன்று சிறிய சறுக்கல் ஏற்பட்டது. நேற்று 42.87/88 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு 42.82/83 ஆனது.












Click it and Unblock the Notifications