விஜயன் கொலை: சிபிசிஐடி விசாரணை ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்கிற விஜயக்குமார் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. , சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராதிகா மேற்பார்வையில் டி.எஸ்.பி. முகமது ஷாஜாகான் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.
விஜயன் கொலை செய்யப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு, விஜயனின் கார் டிரைவர் செந்தில், அலுவலக வாட்ச்மேன் ராஜேந்திரன் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications