'தமிழ்நாடு குஜராத்தாகும்': கனிமொழி பேச்சு தவறில்லை-பாஜக

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மத்திய அமைந்த அரசுகளிலேயே மிகவும் பலவீனமான அரசு இந்த அரசுதான்.
மத்திய அரசு விலைவாசி உயர்வு, பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது.
2006 முதல் இதுவரை 16 மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. இதில் 12 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
உரம், பூச்சி மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுபாடு நிலவுகிறது. கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு ரூ. 1000 கொடுக்கிறது. ஆனால், நெல்லுக்கு கொடுக்கவில்லை. ஏன்.
விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மாற்ற வேண்டும் என மத்திய அரசை முதல்வர் கருணாநிதி நிர்பந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு நவம்பர் மாதமே தேர்தல் வர வாய்ப்புள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தாக மாறி விடும் என்று கனிமொழி கூறியதில் தவறில்லை. சந்தோஷம்தான். குஜராத் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலம். அங்கு மின்சார தட்டுப்பாடு இல்லை. வளர்ச்சி அடைந்த மாநிலம். அந்த நிலை இங்கும் ஏற்பட்டால் சந்தோஷம் தானே என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications