'குரு பேச்சு' முடிந்துபோன பிரச்சனை-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
விழுப்புரம்: பாமகவுடனான உறவு குறித்து விவாதிக்க திமுக உயர்நிலைக் கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில் இன்று பாமக செயற்குழுக் கூட்டம் கூடியது.

திண்டிவனம் அருகே உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் பாமக மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியி்ன் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

திமுக-பாமக இடையிலான உறவு தொடர்ந்து சீர்குலைந்து வரும் நிலையில் திமுக தலைவர்களின் தலையை வெட்டுவேன் என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சால் திமுக கடுப்பானது.

இதையடுத்து கூட்டணியை விட்டு பாமகவை நீக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதே போல திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என பாமக நிர்வாகிகளும் ராமதாசிடம் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று பாமக செயற்குழு கூட்டப்பட்டது. இதில் பேசிய பல நிர்வாகிகளும் திமுக, நம்மை நீக்கும் முன் நாமே கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என பேசியதாகத் தெரிகிறது.

ஆனால், தங்களை திமுகவே, நீக்கட்டும் அதுவரை பொறுத்திருப்போம் என்ற முடிவில் ராமதாஸ் உள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் கூ‌ட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

காடுவெட்டி குரு பிரச்சனை முடிந்த போன கதை. அதை ஏன் முதல்வர் இப்போது அரசியலாக்குகிறார் என்று தெரியவில்லை.

மேலும் குரு மீது நான் எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து முதல்வரே எனக்கு ஒரு கடிதம் கூட எழுதினார் என்றார் ராமதாஸ்.

இதனால் இன்றைய கூட்டத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது என்பது போன்ற முடிவும் எதுவும் எடுக்கப்படவில்லை. நாளை திமுக எடு்க்கப் போகும் முடிவைப் பொறுத்தே பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+