12 எஸ்.பிக்கள், 3 டிஐஜிக்கள் இட மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 12 எஸ்.பிக்கள், 3 டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவின் சூப்பிரண்டாக இருந்து வரும் சோனல் மிஸ்ரா விடுமுறையில் போகிறார். தஞ்சை மாவட்ட எஸ்.பி. தேன்மொழி, சிறப்பு போலீஸ் பிரிவு 4வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகமாற்றப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் துணை ஆணையர் அமல்ராஜ் விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் எஸ்.பி. சம்பத்குமார், தஞ்சை எஸ்.பியாகியுள்ளார். சேலம் எஸ்.பி. பாஸ்கரன், ஆவின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கொள்ளைத் தடுப்பு எஸ்.பி. செந்தில்குமாரி, சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்து வந்த சத்தியமூர்த்தி, மாநில உளவுப் பிரிவு சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில உளவுப் பிரிவு சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பாண்டியன், அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அண்ணா நகர் துணை ஆணையர் ஜெயகவுரி கொள்ளைத் தடுப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை துணை ஆணையர் பாலநாகதேவி அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கண்காணிப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயந்தி, சேலம் போக்குவரத்து குற்றப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் இளங்கோ, கோட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் சரக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை சரகத்திற்கு மாற்றப்ட்டுள்ளார். திண்டுக்கல் சரகத்தையும் கூடுதலாக கவனித்து வருவார்.

திருச்சி சரக டிஐஜி அசோக்குமார் தாஸ், சென்னை தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி சந்தீப் ராய்ரத்தோர், திருச்சி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+