கரூர் அருகே டெட்டனேட்டரை கொள்ளையடித்த 7 பேர் கைது !
கரூர்: கரூர் அருகே சில தினங்களுக்கு முன்பு டெட்டனேட்டர் திருட்டுப் போன வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன் (42).
இவர் அப்பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு தேவையான வெடி பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 24 ம் தேதியன்று அவரது குடோனில் இருந்து சுமார் 17 ஆயிரத்து 100 டெட்டனேட்டர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து முருகேசன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை பிரிவை சேர்ந்தவர்கள் டெட்டனேட்டர் கொள்ளையர்களை கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகன், செந்தில், முருகேசன், பிரகாஷ், சாமிகண்ணு, முத்துச்சாமி, செளந்தராஜன் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் டெட்டனேட்டர்களை கொள்ளையடித்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications