குடிக்க பணம் இல்லாததால் விவசாயி தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகையில் குடிக்க பணம் இல்லாதாதல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அருகே உள்ளது குற்றம் புரிந்தான் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். விவசாய தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் அவர் ஜெகநாதபுரம் வாய்க்கால் கரையோரம் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பிரேத்ததை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் கஜேந்திரன் குடிக்க பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications