போதையில் ரகளை செய்தவரை தட்டி கேட்டவருக்கு கத்தி குத்து !
Subscribe to Oneindia Tamil
நாகை: குடிபோதையில் ரகளை செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
நாகை கீழையூர் அருகே சிந்தாமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (45). இதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
ரமேஷ் நேற்று இரவு மது அருந்தி விட்டு தெருவில் நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தர். இதனை கண்ட சண்முக நாதன் அவரிடம் சென்று அமைதியாக செல்லும் படி கூறினார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது நண்பர்கள் கபாலி, கணேசமூர்த்தி, நடராஜன் ஆகியோர் சேர்ந்து சண்முகநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நிழல்ராஜ், ரமேஷ் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் நிழல்ராஜ் தலையில் பாட்டிலால் அடித்தனர். ரமேஷுக்கு கத்தி குத்து விழுந்தது.
படுகாயம் அடைந்த முன்று பேரையும் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications