வட, கிழக்கு மாநிலங்களில் கன மழை - ரயில்கள் ரத்து
சென்னை: வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் மற்றும் கிழக்கில் உள்ள மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தா நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக இந்த மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில் தண்டவாளங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதன் காரணமாக சென்னையிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளு.
நேற்று சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து ஒரிசா வழியாககொல்கத்தா செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல இன்று செல்ல வேண்டிய பெங்களூர் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ், ஜஸ்வந்த்பூர்- முசாபர்பூர் எக்ஸ்பிரஸ், ஜஸ்வந்த்பூரிலிருந்து கோரக்பூருக்கு காட்பாடி வழியாக செல்லும் ரயில், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாலிமாரிலிருந்து - நாகர்கோவிலுக்கு காட்பாடி வழியாக 20ம் தேதி செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குரிய டிக்கெட்டை கேன்சல் செய்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக சென்டிரல் நிலையத்தில் நான்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு 044-25357393, 25347277 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
--
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications