தர்மபுரி அருகே விஷச் சாராயத்திற்கு 3 பேர் பலி

கடந்த மாதம் கர்நாடக, தமிழக எல்லை கிராமங்களில் கள்ளச்சாராயத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு நீங்குவதற்குள், தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி அருகே உள்ளது குக்கல். இது ஒரு மலை கிராமமாகும். இக்கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் நேற்று காலை கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.
இதில் சிலருக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் பொம்மிடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் வேலு, செல்வம், கோபால் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வருமாறு போலீஸார் ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தனர். மேலும் சாராயம் குடித்து விட்டு வேலைக்குச் சென்ற யாரேனும் இறந்துள்ளனரா என்பதை அறியவும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கள்ளச்சாராய சாவால் குக்கல் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications