சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேன் படுகொலை
சென்னை: சென்னை வடபழனியில், அடுக்குமாடிக் குடியிருப்பில், காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் பிரணவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 18 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு காவலாளியாக இருப்பவர் பெரியசாமி (64). இவர் ராணி அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்.
பெரியசாமி பிரணவ் குடியிருப்பிலேயே தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ராணி அண்ணாநகர் வீட்டில் பெரியசாமியின் மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு பெரிய சாமி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த குடியிருப்பை சேர்ந்த 2 வாலிபர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலை பார்க்கின்றனர். இருவரும் நேற்று படம் பார்த்து விட்டு இரவு 1.15 மணிக்கு வந்தனர். அவர்களுக்கு பெரியசாமி கதவை திறந்து விட்டார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பெண் நாயுடன், நடை பயிற்சி மேற்கொள்வதற்காக கீழே வந்தார். அப்போது காவலாளி பெரியசாமி படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதைப் பார்த்து அந்த பெண் அதிர்ச்சியில் அலறினார்.
அனைவரும் ஓடி வந்து பார்த்தபோது பெரியசாமி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. போலீஸாருக்குத் தகவல் போனது.
பெரியசாமியின் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து ஓடி 100 அடி சாலையில் சென்று நின்றது. கொலை நடந்த இடத்தில் இருந்து ரத்தம் படிந்த கல், பிளேடு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
எந்தப் பொருளும் கொள்ளை போகாததால், கொள்ளையடிக்கும் நோக்கில்நடந்த கொலை அல்ல என்று தெரிய வந்துள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நகரின் மையப் பகுதியல் இக்கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications