பங்குச் சந்தை கிடுகிடு சரிவு: பணவீக்கம் 11.42 % ஆனது

இதனால் நேற்று ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் குறியீடு மீண்டும் 14 ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாகச் சென்றது.
பணவீக்கம், ரொக்க இருப்பு விகித உயர்வு மற்றும் நிலையற்ற விலை நிலை போன்றவற்றால் செவ்வாய் மற்றும் புதன் கிழமை இரு தினங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் நேற்று, பங்குச் சந்தை முடியும் தறுவாயில் 325 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது.
ஆனால் இன்று சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதன் விளைவாக இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண்ணும் இன்று காலை 159 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.
இப்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்சை குறியீட்டு எண்ணான செசெக்ஸ் 13,898.76 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 4144.20 புள்ளிகளாகவும் உள்ளது.
பணவீக்கம் 11.42 % ஆனது:
இதற்கிடையே பணவீக்கமும் 11.05 சதவீதத்திலிருந்து 11.42 சதவீதமாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications