இந்திய-பாக். வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி இன்று இந்தியா வந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டமாக இந்தப் பயணத்தை குரேஷி மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்ற பின் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார் குரேஷி.
டெல்லியில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அவர் பேச்சு நடத்தினார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரையும் குரேஷி சந்தித்துப் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications