சென்னை விமானத்தில் கோளாறு - 124 பயணிகள் தப்பினர்
சென்னை: 124 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று சிங்கப்பூருக்கு 124 பயணிகள், 5 ஊழியர்களுடன் ஐசி 557 என்கிற இந்தியன் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் என்ஜின் ஒன்றில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானம் சென்னைக்குத் திருப்பப்பட்டது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
பின்னர் என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மாலையில் விமானம் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டது. அப்போது 3 பயணிகள் தாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்து இறங்கிச் சென்று விட்டனர். இதையடுத்து 121 பயணிகளுடன் விமானம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications