பதவி விலகுவேன், ஆனால்.. முஷாரப் நிபந்தனை
இஸ்லாமாபாத்: தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசு உறுதியளித்தால் அதிபர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப் மீது ராணுவ ஆட்சி அடக்குமுறை, முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்தது, நீதிபதிகளை கைது செய்தது, எமர்ஜென்சியை கொண்டு வந்தது, ஆட்சியைக் கவிழ்த்தது உள்பட 10 குற்றச்சாட்டுகளை நவாஸ் ஷெரீப்பின் கட்சி கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையி்ல் முஷாரப் மீது நாடாளுமன்றத்தி்ல் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ் கோரி வருகிறார்.
ஆனால், இதைச் செய்ய ஆட்சியில் உள்ள சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மறுத்தது. இதனால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என சர்தாரியை நவாஸ் மிரட்டி வருகிறார்.
இதனால் கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முஷாரப் கைது செய்யப்படும் நிலை கூட உள்ளது. அதிலிருந்து தப்பும் வகையில், தானே பதவி விலகி விடுவதாகவும், ஆனால், அதற்கு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதி அளிக்க வேண்டும் என்றும் முஷாரப் தரப்பு கோர ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தானின் முன்னணி நாளதழான த நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications