முதல்வர் பிறந்த நாள் ஜல்லிக்கட்டு-ஒருவர் பலி, 165 பேர் காயம்
திருச்சி: திருச்சியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார், 165 பேர் படு காயம் அடைந்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தது. அப்போது காளைகளை அடக்க முயன்ற தஞ்சை மாவட்டம், கண்டிதம்பட்டுவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக பலியானார். மேலும் 165 பேர் படு காயம் அடைந்தனர்.
காளைகளை அடக்கிவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டது.
இநத விழாவில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா எம்பி, திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications